Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Tuesday 7 November 2017

பயணியை கீழே தள்ளி தாக்கிய விமான நிறுவன பணியாளர்கள்








பேருந்தில் கூட்டம் அலைமோதும்போது உள்ளே போக சொல்லி படியில் நிற்பவர்களை நடத்துனர் பிடித்து பேருந்துக்குள் தள்ளி விடும் சம்பவங்களை பார்த்திருப்போம், ஆனால் விமான நிலையத்தில் விமானத்துக்கு பயணிகளை அழைத்து கொண்டு செல்லும் பேருந்தில் பயணி ஒருவரை ஏற விடாமல் பணியாளர்கள் கீழே தள்ளி விட்ட சம்பவம் நடந்துள்ளது. டில்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன பணியாளர் ஒருவர் விமான பயணியை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்த சம்பவம் குறித்த காணொளி காட்சி நேற்று வெளியாகி வைரல் ஆக துவங்கியுள்ளது. 


இண்டிகோ விமான நிறுவன பணியாளரால் தாக்கப்பட்ட பயணியின் பெயர் ராஜீவ் கத்தியால் என்று தெரிய வந்துள்ளது, செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் "டில்லி விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தபோது இண்டிகோ விமான நிறுவன பணியாளர்கள் என்னிடம் அநாகரிமாக நடந்து கொண்டனர், ஏற்கெனவே இரண்டு பேருந்துகள் விமானம் புறப்படுமிடத்திற்கு பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் மூன்றாவது பேருந்துக்காக நாங்கள் காத்து கொண்டிருந்தோம், மூன்றாவது பேருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லையா? எப்போது வரும்? என்று அங்கிருந்த பணியாளரிடம் கேட்டேன், அப்போது அங்கு வந்த மூன்றாவது பேருந்தில் ஏற முயன்ற போது என்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பணியாளர் பேருந்தில் ஏற விடாமல் என்னை தடுத்ததுடன், அவருடன் இருந்த இன்னொரு பணியாளர் இவனுக்கு இன்று நல்ல பாடம் கற்பிப்போம் என்று சொல்லி என்னை பிடித்து கீழே தள்ளி விட்டார்" என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணியிடம் தனிப்பட்ட முறையில் விமான நிறுவனத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இண்டிகோ விமான நிறுவன தலைவர் ஆதித்யா கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் டில்லி விமான நிலையத்தில் பயணிக்கு எங்கள் விமான நிறுவன பணியாளரோடு ஏற்பட்ட இந்த மோசமான அனுபவத்திற்காக நான் வருந்துகிறேன்.  பாதிக்கப்பட்ட பயணியிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுள்ளேன், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதோடு விமான நிறுவனத்தின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மீண்டும் பாதிக்கப்பட்ட பயணியிடம் இந்த அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறியுள்ளார். 
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்