Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Saturday 22 July 2017

வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி

ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, இன்னும் சிலருக்கு நன்றாக படித்திருந்தும் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான சிறந்த வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் இவ்வுலகில் வாழ்வதற்கு அடிப்படை தேவையான வீடு கூட இல்லாமல் வீதியில் அலைபவர்களும் உண்டு. இரக்கம் சிறிதும் இல்லாத மனித உருவில் இருக்கும் மிருகங்கள் இவர்களை தரித்திரம் பிடித்தவர்கள் என்று சொல்லி ஒதுங்கி போவதும் உண்டு. 



 இப்படி வீதியிலும், சாலை ஓரங்களிலும் பொழுதை கழிக்கும் வீடிலாத மக்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு புகை, கால மாற்றத்தால் வரும் பனி , குளிர், தகிக்கும் வெயில் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு கவனிக்க ஆளில்லாமல் இறந்து போவதும் உண்டு. பள்ளி பருவத்தில் தன் வயது பிள்ளைகளோடு விளையாடி பொழுதை போக்க வேண்டிய ஹெயிலி போர்ட் (கிட்சாப் கவுன்டி, வாஷிங்டன்நகரம்) என்ற ஒன்பது வயது பள்ளி செல்லும் சிறுமி வீடில்லாத மக்களுக்கு நகரும் வீடு (தள்ளி செல்ல கூடிய) மொபைல் வீடுகளை கட்டி தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?



 இவருடைய சேவை, வீடும் உணவுமின்றி, சாலையில் தவித்து கொண்டிருந்த எட்வர்ட் என்ற மனிதரை கண்டபோது துவங்கி இருக்கிறது. அந்த மனிதர் சாலையில் உணவின்றி பசியோடு தவிப்பதை பார்த்து இச்சிறுமி தன் தாயிடம் அவருக்கு ஏதாவது உணவு தரும்படி கேட்டிருக்கிறார், அவருக்கு ஒரு சான்ட்விச் கொடுத்து அவர் பசியை போக்கி இருக்கிறார், பிறகு இவரை போன்றவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தன் வீட்டு தோட்டத்தில் காய்கறிகளை பயிர் செய்து, விளையும் காய்கறிகளை உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்.



 எட்வர்டுக்கு உணவு கொடுத்து உதவிய பின்பு தான் அவருக்கு வீடும் கிடையாது என்று தெரிய வந்துள்ளது, அவரது கஷ்டத்தை போக்க வீடு ஒன்றை அவருக்கு தயாரித்து கொடுக்க விரும்பி இருக்கிறார். எட்டுக்கு நாலு அளவில் ஜன்னலும் கதவும் கொண்ட சிறிய மர வீடுகளை சக்கரங்களோடு (தள்ளி செல்வதற்கு வசதியாக) தயார் செய்து இலவசமாக வழங்கி இருக்கிறார்.



 பின்பு வீடில்லாத மக்களுக்கு எல்லாம் தன் பெற்றோர்கள் உதவியுடன் வீடுகளை தயாரித்து வழங்க துவங்கி இருக்கிறார், இந்த வகை மொபைல் வீடுகளை உருவாக்குவதற்கு முன்னூறு டாலர் வரை செலவாகிறது (நம்ம ஊர் பணத்தில் சுமார் இருபதாயிரம் ரூபாய்) இவர் செய்யும் சேவையை அறிந்து இவருக்கு சலுகை விலையில் பொருட்களை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


"வீடில்லாமல் மக்கள் வீதியில் திரிவது எனக்கு சரியாக படவில்லை , எல்லா மனிதர்களுக்கும் தங்குவதற்கு சிறிய இடமாவது இருக்க வேண்டும், மோசமான வானிலை மாற்றங்களால் வீடில்லாத ஏழை மக்கள் பாதிக்கபடுவதை காண நான் விரும்பவில்லை" என்று கூறுகிறார் இந்த சிறு வயது கொடை வள்ளல். 

Sunday 16 July 2017

புதியதோர் உதயம் - சுபலக்ஷ்மி திருமண தகவல் மையம்



* சுபலக்ஷ்மி திருமண தகவல் மையம் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை குறிப்பிட்ட காலம் மட்டும் வரன் பதிவு கட்டணம் இல்லை. வரன் பதிவு முற்றிலும் இலவசம் 

இணையதளத்தில் இலவசமாக வரன் பதிவு செய்ய WWW.SUBALAKSHMI.COM

* அனைத்து இனத்தவருக்கும் ஏற்ற வரன் அமைத்து தரப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலவசமாக வரன் பதிவு செய்ய அழையுங்கள் 8940289987, 8940289778, 8940289909 

* ஈமெயில் மூலம் வரன் பற்றிய சுய விவர குறிப்பை எங்களுக்கு அனுப்பலாம்: எங்கள் ஈமெயில் முகவரி: shubamanam@gmail.com 

*  வாட்ஸ் அப் எண் மூலம் வரன் பதிவு செய்ய வரனின் சுய விவர குறிப்பை எங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்: 8940289909  


 * நேரில் வரன் பதிவு செய்ய தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை எங்கள் அலுவலகத்தில் இலவச வரன் பதிவு நடைபெற்று வருகிறது 

எங்கள் முகவரி: 

கடை எண்: 3,  6/ 81, சண்முகா காம்ப்ளக்ஸ், மாதவராவ் நகர் முதல் தெரு, அண்ணாநகர், நாஞ்சிகோட்டை ரோடு, தஞ்சாவூர் – 613006   

தொடர்புக்கு: 8940289987, 8940289778, 8940289909






Thursday 6 July 2017

காணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்

சில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்கும்போது, பிள்ளையை தொலைச்சிட்டு பெத்தவங்க மனசு என்ன பாடுபடும், என்று எண்ணி இதயம் கனத்து போகும். அதே சமயம் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் காணாமல் போனவர்கள், பிரிந்த சொந்தங்களை கண்டுபிடித்து இணையும் அதிசய சம்பவங்களும் நடக்க தான் செய்கிறது. 

 இந்த முறை காணாமல் போன ஒரு தாய் தன் குடும்பத்தினருடன் திரும்பவும் இணைந்திட யூ டியூப் காணொளி காட்சி பகிரும் ஊடகம் உதவி இருக்கிறது என்பது தான் வியப்பளிக்கும் செய்தி. கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி ப்ரூக் ராபர்ட்ஸ் என்பவர் வீடின்றி சாலையோரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்திருக்கிறார். அப்போது தலையில் பனிகுல்லா அணிந்து குட்டை கூந்தலுடன் காணப்படும் ஒரு பெண்மணிக்கு உணவு வழங்கும் காட்சியையும் படம் பிடித்து யூ டியூப் வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.


இந்த காணொளி காட்சியை ஃப்ளோரிடவை சேர்ந்த ஈவான் அல்சன் என்ற சிறுவன் யூ டியூப் வலைதளத்தில் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறான், காரணம் அந்த காணொளி காட்சியில் உணவு பெற்று கொண்டிருந்தது, நவம்பர் மாதம் முதல் காணாமல் போயிருந்த அவன் தாய், அவர் கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லாமல் இருந்தவர், அவர் திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போகவும், எங்கெங்கோ தேடி பார்த்து கிடைக்காமல் போகவும், அவர் இறந்து விட்டார் என்று அவர் குடும்பத்தினர் முடிவு செய்து வேதனையோடு வாழ்ந்து வந்திருக்கின்றனர், இப்போது அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் சில நல்ல விஷயங்களும் நடக்க தான் செய்கிறது.