Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Thursday 23 November 2017

வாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ

டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்களையும் பார்க்கும் போது வேதனை தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஊனமுற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே  நினைக்காமல் வாழ்கையில் முன்னேறி வருகின்றனர். அவர்களை கேலியாக பார்க்கும் இந்த சமூகம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இவர்கள் வாழ்க்கை இருக்கிறது. 



சீனாவை சேர்ந்த யாங் லீக்கு 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் மறக்க முடியாத கருப்பு தினமாக மாறி போனது, அப்போது அவளுக்கு முன்று வயது தான், தன் வயதையொத்த சிறு பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருந்தபோது, தெரியாமல் அங்கிருந்த ஹை வோல்டேஜ் மின்சார ஒயரை தொட்டதால் அடித்த ஷாக்கில் தூக்கி எறியபட்டாள், உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டதால் உயிர் பிழைத்து கொண்டாலும் மின்சாரம் பாய்ந்த கரங்கள் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

                     


இரண்டு கரங்களையும் இழந்து நின்ற யாங் லீயை பார்த்து அவரது குடும்பமும் சொந்தங்களும் மனமொடிந்து கண்ணீர் சிந்தினாலும், யாங் லீ சிறிதும் நம்பிக்கை இழக்கவில்லை, அவள் வளர வளர அவள் நம்பிக்கையும் வளர்ந்தது, மிகவும் கஷ்டப்பட்டு பள்ளி படிப்பை முடித்த யாங் லீ கடந்த 2007 ஆம் ஆண்டு சீனாவின் புகழ்பெற்ற அன்ஹுயி விவசாய கல்லூரியில் 514 புள்ளிகளுடன் சேர்ந்துள்ளார், இப்போது கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெற்று ஒரு கிளெர்க்காக வேலை பார்த்து வருகிறார். 



தன் வாழ்க்கையில் நடந்தவற்றையும் தினசரி வாழ்க்கை முறையையும் யாங் லீ சமூக ஊடகங்களில் நேரடி காணொளி காட்சிகளாக பகிர தொடங்கிய பின்பு யாங் லீயின் வாழ்க்கை வெளி உலகுக்கு தெரிய வந்தது, இப்போது சமூக ஊடகங்கள் மூலமாக இவருக்கு 900,000 பேர் ரசிகர்களாக மாறியுள்ளனர்.




"உடல் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்க்கை மிகவும் சாதாரணமானதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தாலும் எனக்கு சமூக ஊடகங்களில் நேரலை காணொளி காட்சி பகிர்வதன் மூலமாக நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்" என்கிறார் யாங் லீ.   இவரை போன்று ஊனமுற்ற மக்கள் பலரின் உள்ளங்களில் யாங் லீயின் வாழ்க்கை நம்பிக்கை விளக்கேற்றுவதாக உள்ளது.  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 15 November 2017

இனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்

டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா? புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். நம் நாட்டில் தயாரிக்கப்படும் எல்லா பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம், 2015ஆம் ஆண்டில்,  சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் மேற்கு வங்க அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் ரசகுல்லா தங்கள் மாநில தயாரிப்பு என்று அங்கீகாரம் (புவிசார் குறியீடு) தர சொல்லி விண்ணப்பம் செய்தனர். மேற்கு வங்க அரசு ரசகுல்லா 1868 ஆம் ஆண்டில் தங்கள் மாநிலத்தை சேர்ந்த இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளரான  நபின் சந்திர தாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பண்டம் என்று ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற உரிமை கோரி இருந்தது. ஓடிஷா மாநிலமும் ரசகுல்லா தங்கள் மாநில தயாரிப்பு என்று இடையில் போட்டிக்கு வந்தது. 

இரண்டு மாநிலங்களின் விண்ணப்பங்களையும் பரிசீலித்ததில் இறுதியில் மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வந்ததும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது எங்கள் எல்லோருக்கும் இனிப்பான செய்தி, ரசகுல்லாவுக்கு மேற்கு வங்க மாநில தயாரிப்பு என்று புவிசார் குறியீடு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது என்று டிவிட்டரில் ட்வீட் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

பார்த்தாலே நாவில் நீர் ஊற வைக்கும் ரசகுல்லா எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
 ரசகுல்லா செய்முறை


ரசகுல்லா செய்முறை காணொளி காட்சி - நன்றி :  தமிழ் கிச்சன்
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 7 November 2017

பயணியை கீழே தள்ளி தாக்கிய விமான நிறுவன பணியாளர்கள்








பேருந்தில் கூட்டம் அலைமோதும்போது உள்ளே போக சொல்லி படியில் நிற்பவர்களை நடத்துனர் பிடித்து பேருந்துக்குள் தள்ளி விடும் சம்பவங்களை பார்த்திருப்போம், ஆனால் விமான நிலையத்தில் விமானத்துக்கு பயணிகளை அழைத்து கொண்டு செல்லும் பேருந்தில் பயணி ஒருவரை ஏற விடாமல் பணியாளர்கள் கீழே தள்ளி விட்ட சம்பவம் நடந்துள்ளது. டில்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன பணியாளர் ஒருவர் விமான பயணியை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்த சம்பவம் குறித்த காணொளி காட்சி நேற்று வெளியாகி வைரல் ஆக துவங்கியுள்ளது. 


இண்டிகோ விமான நிறுவன பணியாளரால் தாக்கப்பட்ட பயணியின் பெயர் ராஜீவ் கத்தியால் என்று தெரிய வந்துள்ளது, செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் "டில்லி விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தபோது இண்டிகோ விமான நிறுவன பணியாளர்கள் என்னிடம் அநாகரிமாக நடந்து கொண்டனர், ஏற்கெனவே இரண்டு பேருந்துகள் விமானம் புறப்படுமிடத்திற்கு பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் மூன்றாவது பேருந்துக்காக நாங்கள் காத்து கொண்டிருந்தோம், மூன்றாவது பேருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லையா? எப்போது வரும்? என்று அங்கிருந்த பணியாளரிடம் கேட்டேன், அப்போது அங்கு வந்த மூன்றாவது பேருந்தில் ஏற முயன்ற போது என்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பணியாளர் பேருந்தில் ஏற விடாமல் என்னை தடுத்ததுடன், அவருடன் இருந்த இன்னொரு பணியாளர் இவனுக்கு இன்று நல்ல பாடம் கற்பிப்போம் என்று சொல்லி என்னை பிடித்து கீழே தள்ளி விட்டார்" என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணியிடம் தனிப்பட்ட முறையில் விமான நிறுவனத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இண்டிகோ விமான நிறுவன தலைவர் ஆதித்யா கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் டில்லி விமான நிலையத்தில் பயணிக்கு எங்கள் விமான நிறுவன பணியாளரோடு ஏற்பட்ட இந்த மோசமான அனுபவத்திற்காக நான் வருந்துகிறேன்.  பாதிக்கப்பட்ட பயணியிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுள்ளேன், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதோடு விமான நிறுவனத்தின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மீண்டும் பாதிக்கப்பட்ட பயணியிடம் இந்த அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறியுள்ளார். 
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 6 November 2017

சுற்றுலா தளமாகும் பாகுபலி படப்பிடிப்பு தளம்

மாலய வசூல் சாதனை செய்த பாகுபலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்கள் இப்போது மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளங்களாக மாறி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த கேரளாவிலுள்ள அத்திரப்பள்ளி அருவிக்கு மக்கள் அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். அந்த அருவி இப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்ற அருவியாகி விட்டது. 

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி படத்தின் பல காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறு ஏக்கர் பரப்பளவில் இந்த திரைப்படத்தின் செட்டுகள்  அமைக்கப்பட்டுள்ளது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்போது இந்த பிரமிக்க வைக்கும் செட்டுகள் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. 


கிட்டத்தட்ட அறுபது கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த செட்டுகளில் கலை நுணுக்கத்தோடு வரையப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு பிரம்மாண்டமான செட்களை வடிவமைத்து நம் கண்களுக்கு திரைபடத்தின் மூலம் விருந்தளித்த பெருமை கலை இயக்குனர் சாபு சிரிலையே சேரும்.


திரைப்படத்தில் பார்த்த மகிழ்மதி சாம்ராஜ்யத்தை நேரில் பார்ப்பதற்கு இரண்டு வகை கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது. சாதாரண கட்டணம் ரூபாய் 1250 - (காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை) என்றும் ப்ரீமியம் கட்டணம் ரூபாய் 2349 (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். 
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 5 November 2017

அமெரிக்க அதிபரின் ஆசிய சுற்று பயணம்



அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு முதல்முறையாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் நீண்ட  அரசு முறை சுற்று பயணத்தை இந்த மாதத்தில் துவங்கி இருக்கிறார் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம்,  பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்யும் வகையில் அவருடைய சுற்றுபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க அதிபராய் இருந்த ஜார்ஜ் புஷ் 1992 ஆம் ஆண்டு இதே போன்று நீண்ட ஆசிய சுற்றுபயணத்தை  மேற்கொண்டார். அதன் பின்பு இத்தகைய நீண்ட சுற்றுபயணத்தை இப்போது அமெரிக்க அதிபராய் உள்ள டொனால்ட் டிரம்ப் துவங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

(நவம்பர் 5 - 6) இந்த ஆசிய சுற்றுபயணத்தின் போது ஜப்பான் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்றிருக்கும் ஷின்ஷோ அபேயை சந்திக்கும் டிரம்ப் அவருடன் வட கொரியாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து விவாதிக்க கூடும் என்று தெரிகிறது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையில் இரண்டு ஏவுகணைகள் ஜப்பான் வான் எல்லையின் மேல் பறந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பயணத்தில் கோல்ப் விளையாட்டு வீரரான ஹிதேகி மட்சுயோமாவையும் பிரபல பாப் இசை பாடகரான பிகொடாரோவையும்  ட்ரம்ப்  சந்திக்க இருக்கிறார். 

(நவம்பர் 7) தென் கொரியா அதிபராய் இருக்கும் மூன் ஜே-விற்கு டிரம்ப் மற்றும் ஷின்ஷோ அபேவுடன்  வட கொரியா விவகாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு, மூன் ஜே வட கொரியாவுடன்  பேச்சுவார்த்தைகள் நடத்தி அதன் மூலமாக சுமுக தீர்வை அடைய விரும்புகிறார், ஆகவே தென் கொரிய அதிபரை சந்திக்கும் போது வட கொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விளக்க வாய்ப்பு இருக்கிறது. 

(நவம்பர் 8 - 9) டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு சீனாவுடன் சுமூகமான உறவு நீடித்து வருகிறது, சீன அதிபரான சி ஜின்பிங்யை  சந்திக்கும்போது சீனாவின் எல்லைபுற வழியாக வட கொரியா நடத்தி வரும் ரகசிய வர்த்தகங்களை தடுக்க நடவடிக்கைகளை தீவிரபடுத்தும்படி வலியுறுத்த வாய்ப்புள்ளது. வட கொரியாவின் 90 சதவிகித வர்த்தகம் சீன எல்லையின் வழியாகவே நடைபெற்று வருகிறது.   சீனாவின் துணையில்லாமல் வட கொரியாவால் வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவுடன் சீனா சில வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

(நவம்பர் 10 - 11) வியட்நாம் நாட்டின் தலைநகரில் நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளார், புடினுடன் டிரம்ப் சிரியா, உக்ரைன் மற்றும் வட கொரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

(நவம்பர் 12) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டரேட்டை சந்திக்கும் டிரம்ப் அங்கே அவருடன் ஆசியான் (ASEAN) அமைப்பில் உள்ள பல நாடுகளின் அதிபர்களையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டரேட் அந்த நாட்டில் பெரும் தலைவலியாய் இருந்து வந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுத்து அமெரிக்க அதிபரின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க அதிபரின் இந்த நீண்ட ஆசிய சுற்றுப்பயண திட்டத்தில் இந்தியா இடம் பெறவில்லை என்ற போதிலும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு உள்ளது. 
சென்ற வார உலகம் படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள் --------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்