Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Monday 12 August 2019

நட்சத்திர ஹோட்டல் - பில்லும் - லொள்ளும்


ப்போது இணையத்தில்  இரண்டு முட்டைகளுக்கு 1700 ரூபாய் பில் வழங்கிய உணவகத்தை  குறித்தும், சில நாட்களுக்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் பில் வழங்கப்பட்ட சம்பவங்களை குறித்து  எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். நட்சத்திர விடுதிகள், நட்சத்திர உணவகங்களில் உணவு அருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும் சங்கடம் தரும் அனுபவமாக உள்ளது. 

பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் மட்டுமே அத்தகைய நட்சத்திர விடுதிகள், உணவகங்களுக்கு செல்வதால் அவர்கள் பல சமயங்களில் பில் தொகையை சரிபார்க்காமல் பில்லிலுள்ள தொகையை பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் பணம் செலுத்தி விட்டு வந்து விடுகின்றனர், இது இப்படிப்பட்ட நட்சத்திர உணவகங்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. 

சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது. அலுவலக விஷயமாக குர்கோன் நகரிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர தனியார் விடுதியில் (பெயர் வேண்டாம்) தங்கி இருந்தோம், அலுவலகத்திலிருந்து சென்ற  ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் புக் செய்யபட்டிருந்தது, எனது அறையில் இருந்த மேஜை டிராயரில் சிறிய பாக்கெட்களில் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, மிக்சர் மற்றும் குளிர்பானங்கள், இன்னும் சில ஸ்நாக்ஸ் வகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதே மேஜையில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய விலை பட்டியல் என் கண்களில் படவில்லை அன்று இரவு சரியாக உணவு ஏதும் அருந்தாததால் ஒரு முந்திரி பருப்பு பாக்கெட்டை பிரித்து சில நிமிடங்களில் முழுவதும் காலி செய்து விட்டேன், பின்பு தான் அங்கு இருந்த விலைப்பட்டியலை பார்த்தேன் அதில் முந்திரிப்பருப்பு பாக்கெட் 70 ரூபாய் என்று அச்சிடப்பட்டிருந்தது, பாக்கெட்டில் பார்த்தால் அந்த முந்திரிப் பருப்பின் விலை 40 ரூபாய் தான் என்று அச்சிடப்பட்டிருந்தது சரி கூடுதலாக 30 ரூபாய் தானே அதை செலுத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் ரூமை காலி செய்து விட்டு ரிசப்ஷனில் எலெக்ட்ரானிக் கார்டை ஒப்படைக்கும்போது முந்திரிப் பருப்பிற்கான பில் தொகை 350 ரூபாய் என்று என்னிடம் கொடுத்தார்கள் அதை நான் வாங்க மறுத்து முந்திரி பருப்பு பாக்கெட்டின் விலை 70 ரூபாய் தான் என்று அச்சிடப்பட்டிருந்தது இப்போது நீங்கள் கொடுக்கும் பில்லில் பல மடங்கு வரி சேர்த்து 350 ரூபாய் என்று சொல்கிறீர்கள் இதை என்னால் கட்ட முடியாது, இது பற்றி  உங்கள் நட்சத்திர உணவு விடுதியின் மேலாளரை சந்தித்து புகாரளிக்க  வேண்டும் என்று அங்கிருந்த ரிஷப்னிஸ்ட்டிடம் கேட்டேன், அதற்கு  அவர் இப்போது மேலாளர் இங்கு இல்லை வருவதற்கு தாமதமாகும் என்று சொன்னார்கள். 

பின்பு, அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர்கள் வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முயன்ற போது  அங்கு ரிசப்ஷனில் பணியில் இருந்தவர் நீங்கள் எந்தத் தொகையும் செலுத்த வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே என்னுடைய பில்லை கிழித்து குப்பை  தொட்டியில் எறிந்து விட்டார். நான் சாப்பிட்ட முந்திரி பருப்பிற்கான அசல் தொகையை (ரூபாய் 70) செலுத்த விரும்பிய போதும் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.

நான் எந்த கேள்வியும் கேட்காமல் பில் தொகையை செலுத்தியிருந்தால் 280 ரூபாய் அவர்களிடம் இழந்திருப்பேன், கேள்வி கேட்டதால் மொத்த தொகையுமே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை படிக்கும் நீங்களும் கேள்வி கேட்க தொடங்குங்கள், அனாவசியமாக பணத்தை இழக்காதீர்கள்.

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Thursday 11 July 2019

வீட்டுச் சாப்பாடு - பெங்களூர் உணவகங்கள் -1


வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருக்கும் போது ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருக்கும்போது சுவையான வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் எவ்வளவு அருமையாய் இருக்கும், எங்காவது வீட்டுச் சாப்பாடு கிடைக்காதா என்று தேடி அலைந்து கண்டுபிடித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும். பெங்களூரில் மகாதேவபுரா பகுதியில் மெயின் ரோட்டிலிருந்து சிறிது தள்ளி இருக்கும் மகேஸ்வரம்மா டெம்பிள் ரோடில் கொஞ்சம்  உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹோம்மேட் ஃபுட்ஸ். 



அன்று மதியம் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டு விட்டதால், இரவு 7 மணி இருக்கும் ஏதாவது லைட்டாக இட்லி, தோசை போன்ற டிபன் சாப்பிடலாம் என்று இந்த உணவகத்துக்கு சென்றேன், கையேந்தி பவன் போல் இல்லாமல் அதே சமயம் நட்சத்திர உணவகம் போலவும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட தோதாக மேஜை நாற்காலிகளுடன் ஒரு மிடில் கிளாஸ் உணவகத்துக்கான வசதிகளுடன் அமைந்திருக்கிறது இந்த உணவகம். 

(படத்தில் இருப்பது நானே தான் - பப்ளிசிட்டி பிடிக்காது அதனால் ஆப்ஸ் உதவியுடன் மாஸ்க்)

ஒரு செட் தோசை சொல்லிவிட்டு காத்திருக்கத் தொடங்கினேன், நம் கண் முன்னே சூடான தோசை கல்லில் தோசை மாவு வார்க்கப்பட்டு சுடச்சுட தோசைகள் தயாரானது, கார குழிப்பணியாரம், ராகி இட்லி, சப்பாத்தி, புளியோதரை  போன்ற ஸ்நாக்ஸ், வெரைட்டி ரைஸ், டிபன் ஐட்டங்களும் விற்பனைக்கு தயாராக இருந்ததை பார்க்க முடிந்தது.



தட்டில் இரண்டு வகை சட்டினி (தேங்காய் சட்டினி தக்காளி சட்டினி) , சாம்பாருடன் செட் தோசை பரிமாறப்பட்டது. தக்காளி சட்டினியில் தோசை துண்டுகளை தோய்த்து ஒவ்வொரு துண்டாக சாப்பிடத் தொடங்கினேன், சாம்பாருக்கும், தேங்காய் சட்டினிக்கும் வேலையே வைக்காமல் தக்காளி சட்டினியே மூன்று தோசைகளுக்கும் சிறந்த ஜோடியாக அமைந்து விட்டது, சில நிமிடங்களில் மூன்று தோசைகளும் தட்டிலிருந்து வயிற்றுக்கு இடம் மாறி விட்டது. 

நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே அருகில் சிலர் சப்பாத்தி, குருமா, ராகி இட்லி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். செட் தோசை சாப்பிட்டதிலேயே வயிறு நிரம்பி விட்டது, இன்னொரு நாள் சப்பாத்தி, ராகி இட்லி சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று எழுந்து விட்டேன். செட் தோசை நாற்பது ரூபாய் தான். மதிய நேரத்தில் வெரைட்டி ரைஸ், மீல்ஸும்  கிடைக்கிறது. மசாலா பொருட்களை அதிகம் சேர்க்காமல் வயிற்றுக்கு கேடு விளைவிக்காத சுவையான வீட்டுச் சாப்பாடு மிடில் கிளாஸ் பட்ஜெட்டில் சாப்பிட விரும்புபவர்கள் இந்த உணவகத்துக்கு தாராளமாக ஒரு முறை வந்து சாப்பிடலாம்.

Monday 15 April 2019

சோமாட்டோ போட்ட பிரியாணி டிவீட்

பிரியாணி என்று சொன்னாலே, அதை ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும், கடைசியாக எங்கே எப்போது  பிரியாணி சாப்பிட்டோம் என்று நினைவுகளை அசைபோடத் தொடங்கி விடுவார்கள், அதிலும் பிரியாணிக்கு என்றே உலகப் புகழ் பெற்ற ஹைதராபாத் பிரியாணியின்  சுவையை பற்றியும், அதன் சுவைக்கு அடிமையாகி கிடக்கும் உணவுப் பிரியர்களை பற்றி சொல்லவும் வேண்டுமா? இப்படிப்பட்ட உணவுப்பிரியர்களின் தீராத ருசிப்புதன்மையால் உணவு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு  மைல்கல்லை தொட்டு சாதனை படைக்கின்றன.

 உணவுப் பொருட்களை வீடு  தேடிச் சென்று டெலிவரி செய்வதில் சாதனை படைத்து வரும் சோமாட்டோ நிறுவனம் சமீபத்தில் அதன் டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட  டிவீட் ஒன்று இணையத்தில் இப்போது செம வைரல் ஆகி வருகிறது, உங்கள் நகரத்தில் இருக்கும் எந்த உணவகத்தில் உணவை வாங்க இப்படி நீண்ட வரிசையில்  காத்திருக்கிறார்கள் தெரியுமா? என்று கேள்வியுடன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவக வாசலில் சோமாட்டோ டெலிவரி பணியாளர்கள் அன்றைய பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ய  பிரியாணி பார்சலைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்கும்  புகைப்படத்தையும் சோமாட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. 


பின்னர் அந்த புகைப்படம் ஹைதராபாத்தில் பிரியாணிக்கென்றே புகழ் பெற்ற பவார்ச்சி உணவகத்தின் வெளியில் எடுக்கப்பட்டது என்று பதிலையும் டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது, ஒரு நாளைக்கு சோமாட்டோவிலிருந்து மட்டும் பவார்ச்சி உணவகத்துக்கு இரண்டாயிரம் பிரியாணி ஆர்டர்கள் குவிகிறது, இந்தத் தகவலை சோமாட்டோ நிறுவனம்  வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையும் உறுதிப்படுத்துகிறது. 

சில வருடங்களுக்கு முன் நல்ல உணவு வகைகள் எந்த உணவகத்தில் கிடைக்கும் என்று உணவுப்பிரியர்கள் தேடிப் பிடித்து சாப்பிட்டு வந்தனர், இப்போது பிரபல உணவகத்தின் பிரியாணி வீடு தேடி  வருகிறது என்றால் விடுவார்களா என்ன? நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு உணவுப்பிரியர்கள் தினமும் வரிந்து கட்டி கொண்டு ஆர்டர் செய்வதால் சோமாட்டோவிலிருந்து மட்டும் பவார்ச்சி உணவகத்துக்கு தினசரி இரண்டாயிரம் பிரியாணி ஆர்டர்கள் என்ற சாதனை சாத்தியமாகி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் உணவுத்துறை சார்ந்த சோமாட்டோ போன்ற டெலிவரி ஆப்கள் கோலோச்சும் காலம் என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------