Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Thursday 25 January 2018

சொந்த நாட்டில் பறந்து போகும் சுத்தம்



சிங்கப்பூரில் வசித்து வரும் என் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் அலுவலக விடுமுறையில் இந்தியா திரும்பியிருந்தார். ஒரு பேருந்து பயணத்தில் தற்செயலாக அவரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரது மகனுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மகன் ஜன்னலோர இருக்கையிலும், நண்பர் அவனுக்கு அடுத்த இருக்கையிலும் அமர்ந்திருந்தனர்,  என்னை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று சொல்லி சிங்கப்பூரில் தன் வேலை, சிங்கப்பூர் நாட்டின் சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடம் உள்ள விழிப்புணர்வு என்று பல விஷயங்களை என்னிடம் மிகுந்த பெருமையுடன் சொல்லி கொண்டு வந்தார், சிங்கப்பூர் நாட்டில் சாலைகளில் கூட குப்பை போட முடியாது , சட்டப்படி அது குற்றம், சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் பேசி கொண்டு வந்தார். 

அவர் சொல்வதை கேட்ட போது சிங்கப்பூர் நாட்டின் சட்டம் கடுமையாக இருப்பதால் அங்கு மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு பொது இடங்களில் குப்பை போடுவதையும், அசுத்தம் செய்வதையும் தவிர்க்கின்றனர், நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இல்லாததால் மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் அசுத்தம் செய்து வருகின்றனர் என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன், நான் இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே நண்பரின் மகன் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலை போடுவதற்கு நண்பரிடம் கவர் கேட்டான், அவனுக்கு  நண்பர் அளித்த பதிலை கேட்டதும் எனக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. அவ்வளவு நேரம் என்னிடம் சுத்தம் பற்றி மிகவும் ஆர்வமாக சொல்லி கொண்டு வந்தவர் மகனிடம் "தம்பி இது சிங்கப்பூர் இல்லை, நம்ம ஊருக்கு (இந்தியாவுக்கு) வந்துட்டோம், நான் குப்பை கவர் எடுத்துட்டு வரல, நீ தோலை அப்படியே ஜன்னல் வழியா தூக்கி போட்டுடு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க" என்றார்.

சிங்கப்பூர் நாட்டில் சட்டம் கடுமையாக இருப்பதால் சுத்தத்தை கடைபிடிக்கும் நண்பருக்கு, சொந்த ஊர் (இந்தியா) திரும்பியவுடன் வசதியாக எங்கே வேண்டுமானாலும் குப்பை போடலாம், அசுத்தம் செய்யலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது, நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்று அரசு எவ்வளவோ திட்டங்கள் போடுகிறது, ஆனால், இது போன்ற (குப்பை) எண்ணம் மக்கள் மனங்களிலிருந்து அகன்றால் தான் நாடு சுத்தமாகும். 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Saturday 13 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



லகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழர் டைம்ஸ் மின்னிதழின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Saturday 6 January 2018

மனிதர்கள் ஜாக்கிரதை

னிதர்களுக்கு தங்கள் சக மனிதர்கள் மேல் உள்ள அன்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மனிதாபிமானம் என்பதே மறைந்து போய் கொண்டிருப்பதையே இந்த வாரம் தொலைக்காட்சி செய்திகளை பார்க்கும் போது தோன்றுகிறது.  அன்பு, சகிப்புத்தன்மையும், பொறுமை போன்ற நற்குணங்கள் எல்லாம் முற்றிலுமாக மனித மனங்களில் இருந்து மறைந்து விட்டால் மனிதனை விட கொடிய மிருகம் உலகில் இருக்க முடியாது என்பதையே நீங்கள் கீழே காண போகும் மூன்று சம்பவங்களும் உங்களுக்கு உணர்த்தும்.

பெற்ற தாயை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற மகன்
பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார், அவரை  கவனித்து  கொள்ள முடியாமல் பெற்ற மகனே தாயை மாடிக்கு அழைத்து சென்று மேலே இருந்து தள்ளிவிட்டு கொன்றது சிசிடிவி காட்சி பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது.  இந்த காட்சியை  பார்த்துவிட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று பொதுமக்கள் சமூக ஊடகங்களில் குமுறி இருக்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா இருந்ததால் இந்த சம்பவம் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது. ஒரு வேளை அந்த கேமரா காட்சி பதிவு வெளிவராமல் போய் இருந்தால் வயதான தாய் தடுமாறி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டார் என்று தான் செய்தி வெளிவந்திருக்கும். ஒரு மகனாக நோய்வாய்பட்ட தாயை வீட்டில் வைத்து கவனிக்க முடியாவிட்டாலும், வெளியில் உள்ள காப்பகங்களிலாவது சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால், மனைவியின் துணையோடு மகனே தாயை கொன்று விட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.   


பெற்ற மகளை மாடியில் இருந்து கீழே வீசி கொன்ற தாய்
தாயை கொல்லும் மகன் மட்டுமல்ல, மகளை கொல்லும் தாயும் உண்டு. சென்ற வருடம் பெங்களுருவில் உள்ள ஜே.பி நகர் பகுதியில் கணவனை பிரிந்து ஏழு வயது மகளோடு வாழ்ந்து வந்த ஆசிரியை ஒருவர் கணவன் மீது கொண்ட வெறுப்பு காரணமாக இரண்டு முறை மாடியில் இருந்து தன் மகளை கீழே வீசி கொன்ற சம்பவம் நடந்தது, முதல் முறை சிறு காயங்களோடு தப்பிவிட்ட சிறுமி, இரண்டாவது முறை கீழே வீசப்பட்ட போது பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டாள். பெற்ற மகளை கொன்று விட்டு தப்ப முயன்ற பெண்ணை அந்த பகுதியில் வசித்த மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  


2 வயது குழந்தையை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும் தாய்

டெல்லியில் சென்ற வருடம், புகுந்த வீட்டாரோடு ஏற்பட்ட பிரச்சினையில், வாக்குவாதம் முற்றியதில் தான் பெற்ற 2 வயது மகனையே மாடிப்படியில் இருந்து உருட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தாய், நல்ல வேளையாக உடனே தாத்தாவும், பாட்டியும் குழந்தையை ஓடி சென்று தூக்கி காப்பற்றி விட்டனர்.


வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் வீட்டு கதவில் நாய்கள் ஜாக்கிரதை என்ற வாசகம் இருப்பதை கவனித்து இருப்பீர்கள், இப்படி  பெற்ற தாயை கொல்லும் மகன்களும், தான் பெற்ற  பிள்ளையையே கொல்லும் தாய்களும் உலகில் இருப்பதை சொல்லும் இந்த பதிவிற்கு   மனிதர்கள் ஜாக்கிரதை என்று தலைப்பு வைத்தது சரி தானே?
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
-------------------------------------------- சமூக ஊடகங்களில் பின் தொடர