Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Thursday 25 January 2018

சொந்த நாட்டில் பறந்து போகும் சுத்தம்



சிங்கப்பூரில் வசித்து வரும் என் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் அலுவலக விடுமுறையில் இந்தியா திரும்பியிருந்தார். ஒரு பேருந்து பயணத்தில் தற்செயலாக அவரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரது மகனுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மகன் ஜன்னலோர இருக்கையிலும், நண்பர் அவனுக்கு அடுத்த இருக்கையிலும் அமர்ந்திருந்தனர்,  என்னை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று சொல்லி சிங்கப்பூரில் தன் வேலை, சிங்கப்பூர் நாட்டின் சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடம் உள்ள விழிப்புணர்வு என்று பல விஷயங்களை என்னிடம் மிகுந்த பெருமையுடன் சொல்லி கொண்டு வந்தார், சிங்கப்பூர் நாட்டில் சாலைகளில் கூட குப்பை போட முடியாது , சட்டப்படி அது குற்றம், சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் பேசி கொண்டு வந்தார். 

அவர் சொல்வதை கேட்ட போது சிங்கப்பூர் நாட்டின் சட்டம் கடுமையாக இருப்பதால் அங்கு மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு பொது இடங்களில் குப்பை போடுவதையும், அசுத்தம் செய்வதையும் தவிர்க்கின்றனர், நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இல்லாததால் மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் அசுத்தம் செய்து வருகின்றனர் என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன், நான் இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே நண்பரின் மகன் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலை போடுவதற்கு நண்பரிடம் கவர் கேட்டான், அவனுக்கு  நண்பர் அளித்த பதிலை கேட்டதும் எனக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. அவ்வளவு நேரம் என்னிடம் சுத்தம் பற்றி மிகவும் ஆர்வமாக சொல்லி கொண்டு வந்தவர் மகனிடம் "தம்பி இது சிங்கப்பூர் இல்லை, நம்ம ஊருக்கு (இந்தியாவுக்கு) வந்துட்டோம், நான் குப்பை கவர் எடுத்துட்டு வரல, நீ தோலை அப்படியே ஜன்னல் வழியா தூக்கி போட்டுடு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க" என்றார்.

சிங்கப்பூர் நாட்டில் சட்டம் கடுமையாக இருப்பதால் சுத்தத்தை கடைபிடிக்கும் நண்பருக்கு, சொந்த ஊர் (இந்தியா) திரும்பியவுடன் வசதியாக எங்கே வேண்டுமானாலும் குப்பை போடலாம், அசுத்தம் செய்யலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது, நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்று அரசு எவ்வளவோ திட்டங்கள் போடுகிறது, ஆனால், இது போன்ற (குப்பை) எண்ணம் மக்கள் மனங்களிலிருந்து அகன்றால் தான் நாடு சுத்தமாகும். 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------