Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Saturday 6 January 2018

மனிதர்கள் ஜாக்கிரதை

னிதர்களுக்கு தங்கள் சக மனிதர்கள் மேல் உள்ள அன்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மனிதாபிமானம் என்பதே மறைந்து போய் கொண்டிருப்பதையே இந்த வாரம் தொலைக்காட்சி செய்திகளை பார்க்கும் போது தோன்றுகிறது.  அன்பு, சகிப்புத்தன்மையும், பொறுமை போன்ற நற்குணங்கள் எல்லாம் முற்றிலுமாக மனித மனங்களில் இருந்து மறைந்து விட்டால் மனிதனை விட கொடிய மிருகம் உலகில் இருக்க முடியாது என்பதையே நீங்கள் கீழே காண போகும் மூன்று சம்பவங்களும் உங்களுக்கு உணர்த்தும்.

பெற்ற தாயை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற மகன்
பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார், அவரை  கவனித்து  கொள்ள முடியாமல் பெற்ற மகனே தாயை மாடிக்கு அழைத்து சென்று மேலே இருந்து தள்ளிவிட்டு கொன்றது சிசிடிவி காட்சி பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது.  இந்த காட்சியை  பார்த்துவிட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று பொதுமக்கள் சமூக ஊடகங்களில் குமுறி இருக்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா இருந்ததால் இந்த சம்பவம் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது. ஒரு வேளை அந்த கேமரா காட்சி பதிவு வெளிவராமல் போய் இருந்தால் வயதான தாய் தடுமாறி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டார் என்று தான் செய்தி வெளிவந்திருக்கும். ஒரு மகனாக நோய்வாய்பட்ட தாயை வீட்டில் வைத்து கவனிக்க முடியாவிட்டாலும், வெளியில் உள்ள காப்பகங்களிலாவது சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால், மனைவியின் துணையோடு மகனே தாயை கொன்று விட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.   


பெற்ற மகளை மாடியில் இருந்து கீழே வீசி கொன்ற தாய்
தாயை கொல்லும் மகன் மட்டுமல்ல, மகளை கொல்லும் தாயும் உண்டு. சென்ற வருடம் பெங்களுருவில் உள்ள ஜே.பி நகர் பகுதியில் கணவனை பிரிந்து ஏழு வயது மகளோடு வாழ்ந்து வந்த ஆசிரியை ஒருவர் கணவன் மீது கொண்ட வெறுப்பு காரணமாக இரண்டு முறை மாடியில் இருந்து தன் மகளை கீழே வீசி கொன்ற சம்பவம் நடந்தது, முதல் முறை சிறு காயங்களோடு தப்பிவிட்ட சிறுமி, இரண்டாவது முறை கீழே வீசப்பட்ட போது பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டாள். பெற்ற மகளை கொன்று விட்டு தப்ப முயன்ற பெண்ணை அந்த பகுதியில் வசித்த மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  


2 வயது குழந்தையை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும் தாய்

டெல்லியில் சென்ற வருடம், புகுந்த வீட்டாரோடு ஏற்பட்ட பிரச்சினையில், வாக்குவாதம் முற்றியதில் தான் பெற்ற 2 வயது மகனையே மாடிப்படியில் இருந்து உருட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தாய், நல்ல வேளையாக உடனே தாத்தாவும், பாட்டியும் குழந்தையை ஓடி சென்று தூக்கி காப்பற்றி விட்டனர்.


வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் வீட்டு கதவில் நாய்கள் ஜாக்கிரதை என்ற வாசகம் இருப்பதை கவனித்து இருப்பீர்கள், இப்படி  பெற்ற தாயை கொல்லும் மகன்களும், தான் பெற்ற  பிள்ளையையே கொல்லும் தாய்களும் உலகில் இருப்பதை சொல்லும் இந்த பதிவிற்கு   மனிதர்கள் ஜாக்கிரதை என்று தலைப்பு வைத்தது சரி தானே?
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
-------------------------------------------- சமூக ஊடகங்களில் பின் தொடர