Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Monday 16 October 2017

உலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கும் பேய் மழை

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை மாநகரை பாதித்த பேய் மழை இந்த வருடம் பெங்களுரு நகரை புரட்டியெடுத்து கொண்டிருக்கிறது. பெங்களுரு மாநகர வரலாற்றிலேயே மிக அதிகமான மழை பொலிவு (165 செ.மீ ) என்று வானிலை மையம் அறிவித்துள்ளது, இந்த மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்திகள் இப்போது தான் ஓவ்வொன்றாக வெளிவர துவங்கியுள்ளது. 

 ஓடும் ஆறாக மாறிய சாலையில் மிதக்கும் கார்கள்


எகோ ஸ்பேஸ் தண்ணீரில் மிதக்கும் அலுவலகங்கள்


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள மாநிலங்கள், நேபாள், பங்களாதேஷ் நாடுகளில் பெய்த மழையால் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பை மாநகரமும் மழை வெள்ளத்தால் அடிக்கடி இந்த வருடத்தில் பாதிப்புக்கு உள்ளானது. தெற்கு ஆசியாவில் மட்டும் இந்த வருடத்தில் மழை வெள்ளத்தால் நாற்பத்தொரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு ஆசியாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் 


ஆசிய கண்டத்தில் மட்டும் தான் இந்த நிலையா என்று பார்த்தால்? அப்படியெல்லாம் இல்லை, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே (ஹரிக்கேன்) புயலும், ப்ளோரிடாவை இர்மா புயலும், இங்கிலாந்தில் பிரிட்டன் நகரமும், அயர்லாந்து தேசமும், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரமும் இந்த வருடத்தில் புயல் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
ஒவ்வொரு நகரத்தையும் தாக்கும் புயல்களுக்கு பெயர் தான் மாறுகிறது, ஆனால் பாதிப்புகள் எல்லா நகரங்களிலும் பயங்கரமாகவே உள்ளது.


இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. இயற்கை மனிதர்களோடு தன் விளையாட்டை இத்தோடு நிறுத்தி கொள்ளுமா? இல்லை இன்னும் கொல்லுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எப்படி தயாராவது அல்லது எதிர்கொள்வது என்று விளக்கும் காணொளி காட்சி