Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Sunday 3 December 2017

கலையழகு மிளிரும் பகுதியாக மாறிய மீன் சந்தை

மும்பை நகரத்தில் உள்ள  142 வருட பழமையான, மிக பிரபலமான மீன்கள் விற்கும் சந்தை பகுதி  சாசூன் டாக். இந்த பகுதிக்கு இப்போது கலை ஆர்வம் கொண்ட மக்கள் படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். கொல்லன் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? மீன்கள் வாசம் வீசும் இந்த பகுதியில் இப்போது தெரு ஓவியங்களால் பெயிண்ட் வாசம் வீச துவங்கி இருக்கிறது.  காலரிகளிலும், அருங்காட்சியகங்களிலும் அடைந்து கிடக்கும் கலை படைப்புகளை, கலை பற்றி ஒன்றுமே தெரியாத சாதாரண மக்களும் புரிந்து ரசிக்கும் வகையில் அவர்களும் கலை படைப்புகளை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நடத்தப்பட்டு வரும் ஸ்டார்ட் இந்தியா (St+Art India) நிறுவனம் சாசூன் டாக்கை தங்கள் கைவண்ணத்தால் கலையழகு மிளிரும் சொர்க்கமாக மாற்றி இருக்கின்றனர். 



பெரும் கட்டிடங்களின் சுவர்களே இவர்களது ஓவியம் வரையும் களமாக உள்ளது.  ஓவியங்கள் மூலமாக மக்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உணர்த்தும் விதத்தில் பிளாஸ்டிக் பெருங்கடல் என்ற கலைப்படைப்பை சிங்கப்பூரை சேர்ந்த டான் சிசி என்ற படைப்பாளி உருவாக்கியுள்ளார்.  இந்த கலைப்படைப்பை பார்க்கும்போதே நாம் பிளாஸ்டிக் குப்பை கடலில் மிதப்பது போன்ற உணர்வை தருகிறது. நாம் தினசரி வாழ்கையில் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகளான வாட்டர் பாட்டில், தேங்காய் எண்ணெய் குப்பி, உணவு பார்சல் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் என்று இந்த பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நுகர்வோராகிய நாமும் காரணம் என்று முகத்திலறைவது போல் சொல்கிறது இவரது படைப்பு. 



இதுவரை டில்லி, பெங்களுரு, ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களில் ஆறு முறை இது போன்ற கண்காட்சிகளை நடத்தி இருக்கும் இந்த நிறுவனம் இதற்கு முன்பு பெங்களூரில் நடந்த கண்காட்சியில் பெங்களுரு நகரத்தின் ட்ராபிக் காரணமாக மிக மெதுவாக நகரும் வாகனங்களை குறிப்பதற்கு அந்த நகரமெங்கும் பேப்பர் நத்தைகளை வரைந்து வைத்து அந்த நகர மக்களை 
கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.



உலகம் முழுவதிலும் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கலை படைப்புகளை ஐம்பது நாட்களுக்கு நடத்தப்பட இருக்கும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பார்வையிடலாம்.  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்